சோதிடம் தவறுகிறது!

செவ்வாய் தோசமுள்ள ஒருபெண்ணுக்கு செவ்வாய் தோசமுள்ள வரனே வேண்டுமென்று தேடிப் பிடித்து மணமுடித்தனர். இருந்தும் அவள் கணவன் உயிரிழக்க நேர்ந்தது. இந்த உண்மைச்சம்பவம் என்னை மிகவும் பாதிப்படைய வைத்தது. அப்போது என்மனதில் தோன்றிய ஒரு சமுதாய வெறுப்புணர்வை எழுதித்தீர்த்தேன்…
இக்கவிதை எழுதப்பட்ட ஆண்டு 2000.

இருட்டுக்குப் பசி என்று அந்திமாலைச் சூரியனை விழுங்கியது.
பொறுப்பற்ற சோதிடனின் புலம்பல் குறி தவறியது.

தாவரச் சாதியெல்லாம் சாவதற்குப் போகிறது!
ஒளிச்சேர்க்கையே தவறுகையில் வெளிச்சேர்க்கை எதற்கு?

செவ்வாயில் தோசமென்றீர் தோசமுள்ள வரன்பிடித்தீர்
எவ்வாயில் சொன்னீரோ அவ்வாயாலாயே விதி என்றீர்.

பெண்மயில் கலங்குவதால் மனம் கொஞ்சம் வலிக்கிறது!

சோதிடத்தை வைத்தெரிக்க தணல் பறக்கும் அடுப்புவேண்டும்!
மானுடத்தை மகிழவைக்கும் மானம்காக்கும் உடுப்புவேண்டும்!

3 மறுமொழிகள்

  1. Well Said!

  2. i believe that your thought.

  3. correct 100%


மறுமொழிகள் RSS பின்னறியும் தடத்தை கண்டறிய உதவுவது URI ஆகும்.

மறுமொழியவும்