புலம்பல் எனது வாடிக்கை – பாகம் 1

சட்டம் கடுமையாக்கினால்
மனித உரிமைமீறல்
என்பவர்கள் கவனத்திற்கு…

வரைமுறை இருந்தே நாம்
பலமுறை மீறுகிறோம்

கொலை செய்தவனுக்குத்
தூக்குதண்டனை மனித உரிமை மீறல் என்றால்,
அவன் கொலை செய்தது
மனித உரிமை மீறலில்லையா…?

பெண்ணைக் களங்கப்படுத்தியவனுக்கு
தண்டனை இல்லையென்றால்
அது அவனுக்கு அனுமதிச்சீட்டல்லவா?

சாலைவிதிகள் மதிக்காத உனக்கு
அபராதம் தவறென்றால்
இன்னொருவன் மீறிப்போவது கண்டு
நீ பொருமுவதும் தவறுதான்

கடுமையான தண்டனைகள்
சிக்கலில்லாத சட்டங்கள்
நாட்டின் பாதுகாப்புக்கு அடித்தளங்கள்

முதலில் நம்நாட்டை
நம்மிடமிருந்து பாதுகாப்போம்
பிறகு எதிரி பற்றி யோசிப்போம்

ஊழல் செய்தவன் சொத்தைப் பிடுங்கி
நாட்டின் நலநிதியில் சேர்க்கட்டும் அரசாங்கம்
செய்வானா அவன்

வக்கீல் மட்டும் வாதாட வேண்டுமா
அனுமதி கொடுத்துப்பார் யாரும் வழக்குரைக்க

பலவழக்குகள் தீரும்
வக்கீல் கூலி தர முடியாதவந்தான்
வழக்குகளைத் திரும்பப் பெறுகிறான்

No Comments Yet

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மறுமொழிகள் RSS பின்னறியும் தடத்தை கண்டறிய உதவுவது URI ஆகும்.

மறுமொழியவும்