
உனக்கு யாரும் உதவவில்லை என்று
மனக்குமுறல் கொள்பவனே
உலகத்தின் நடப்புகளைப் பற்றித்தெரிந்துகொள்
அடுத்தவனுக்கு உதவ எண்ணும்
உதவி பண்ணும் 99 விழுக்காட்டினர்
யாருக்கு உதவிசெய்கிறார்களோ
அவர்களாலேயே
அவமானப்படுத்தப் படுகிறார்கள்
உன் உள்மனத்தைக் கேட்டுப்பார்
உனக்கு உதவி செய்தவர்களை
எப்படியெல்லாம்
அவமானப்படுத்தினாய் என்று
அது சொல்லும்!
நமக்கு சுயநலம் பெருகுவதன்
மூலகாரணமே இதுதான்!
எனவே இனிமேலாவது
சுயநலக்காரனென்று ஏசாதே!
அப்படி அவரை ஆக்கியது
நம் செயலென்று யோசி!
1 கட்டளை(கள்).
மறுமொழிகள் RSS பின்னறியும் தடத்தை கண்டறிய உதவுவது URI ஆகும்.
மறுமொழியவும்

சிந்திக்க வைத்து விட்டீர்கள் போங்க!!!