சொல்வீரனல்ல செயல்வீரன்

திரு மகாராஜ் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய கவிதையை நான் தமிழில் மொழிபெயர்த்திருந்தேன் (இங்கே காண்க). பின்னர் அதிக ஆர்வம் அவரிடம் காணப்படுகிறது. உடனே மென்பொருள் ஆராய்ச்சியை விட்டு தமிழ்க்கவிஞராகவே ஆகிவிட்டார். செயிண்ட் லூயிஸில் ஒரு தமிழ்க் கவிஞர் வாழ்கிறார் என்பது நமக்கெல்லாம் பெரு மகிழ்ச்சியாக இருக்கிறது. அடுத்த கவிதை அவரே தமிழில் எழுதி அனுப்பிவிட்டார். செயல்வீரன் என்று ஒப்புக்கொள்ளச் செய்துவிட்டார்.
அழகான கவிதைவரிகள் உண்மையை எதார்த்தமாய் எடுத்துரைக்கிறது! அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர் கவிதையை இங்கு பதிவிடுகிறேன்.

என்னால் எதுவும் முடியும் [...]

என்னருமைப் பரம்பொருளே!

இக்கவிதை அமெரிக்காவின் செயிண்ட் லூயிஸ் நகரத்திலிருந்து அன்பர் திரு. மஹாராஜ் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதி அனுப்பியிருந்தார். அதைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன்.
ஆங்கிலக்கவிதை:
In the farthest distance i see a light, a Divine light
Oh Divinity! pardon my ignorance ,
Guide me to the path of wisdom
Illuminate the light within me to lead a simple and humble life
Bless me ..
To seek the eternity and strive [...]

யார் முட்டாள்?

“ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெங்களூரில் நேற்று 31/03/2008)கன்னட அமைப்பினர் ரகளையில் ஈடுபட்டனர். தமிழ் சினிமா தியேட்டர்கள் தாக்கப்பட்டன. தமிழக பஸ்கள் சிறை பிடிக்கப்பட்டன. தமிழகத்துக்கு தண்ணீர் தரமாட்டோம் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.”
-தினத்தந்தி 1/4/2008.
நீரும் நெருப்பும் வானும் காற்றும் பொதுவிலிருக்குது…
மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கிடக்குது!
பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனிதர் இதயமே – இங்கு
பிரிவு நீங்கி ஒன்றாய்ச் சேர்ந்தால் அமைதி நிலவுமே…
நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற – இந்த
நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற…
சீர்காழி [...]