அன்பார்ந்த நட்பே! இப்படி நம்மால் மனதார அழைக்க முடிகிறதென்று நினைக்கிறீரா? அயல் நாடு போனவரும் சரி, அடுத்த ஊர் போனவரும் சரி, ஒரு நாள் உயிரான நட்பை உணர்வோடு கலந்தவராய்த் தோன்றியவரும் சரி உண்மையாய் நட்பை நினைப்பார் யாருமில்லை! இரவில் துணையாய் நிலவுவருவதைப் போல ஒட்டுமொத்த அன்பால் நம்முடன் கூட்டாய் இருந்தவர் கூட சிட்டுக்குருவியாய் பறந்து போய் செல்வத்தை சேகரிப்பார்! கூட்டுப் படிப்பை கல்லூரி நாட்களை நினைப்பதற்கு நேரமில்லை! கற்றதும் கல்வி மறப்பார்! அவர்மேலும் தவறு இல்லை [...]
