உமிழ்ந்து கெடுத்தோம்!

உமிழ்ந்து கெடுத்தோம்
என்னை முந்திக்கொண்டுபோனார் ஒரு மனிதர்
விண்ணை எட்டியது அந்த இருசக்கரவாகனப் புகை
முந்தியதும் எனக்கு நேர் முன்னால் காறிஉமிழ்ந்தார்
வந்ததே கோபம் எனக்கு, முயன்று முந்தினேன்
வண்டியை நிறுத்திக் கேட்டேன் “அய்யா நலமா?”
சண்டிக்குதிரை வண்டி மெதுவாக நின்றது.
வியப்பில் ஆழ்ந்தார் மனிதர் – குரலில்
தயக்கம் தோயக் கேள்வி எழுப்பினார்
“கண்டதில்லையே உம்மை…
எப்படி அறிந்தீர் என்னை?”
“இப்போதுதான் அறிந்தேன்…
நீங்கள் துப்பிய எச்சில் என் சட்டைப்பைக்குள் விழுகையில்”
சொல்லிமுடித்தேன்; அவர் முகமும் சுருங்கிற்று!
தொடர்ந்து சொன்னேன்,
“உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய உமக்கு விருப்பம்
எனது வாழ்வும் எனக்கு விருப்பம்… ஆனால்,
மனிதரை மனிதர் மதிப்பதுதான் [...]

சொல்வீரனல்ல செயல்வீரன்

திரு மகாராஜ் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய கவிதையை நான் தமிழில் மொழிபெயர்த்திருந்தேன் (இங்கே காண்க). பின்னர் அதிக ஆர்வம் அவரிடம் காணப்படுகிறது. உடனே மென்பொருள் ஆராய்ச்சியை விட்டு தமிழ்க்கவிஞராகவே ஆகிவிட்டார். செயிண்ட் லூயிஸில் ஒரு தமிழ்க் கவிஞர் வாழ்கிறார் என்பது நமக்கெல்லாம் பெரு மகிழ்ச்சியாக இருக்கிறது. அடுத்த கவிதை அவரே தமிழில் எழுதி அனுப்பிவிட்டார். செயல்வீரன் என்று ஒப்புக்கொள்ளச் செய்துவிட்டார்.
அழகான கவிதைவரிகள் உண்மையை எதார்த்தமாய் எடுத்துரைக்கிறது! அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர் கவிதையை இங்கு பதிவிடுகிறேன்.

என்னால் எதுவும் முடியும் [...]

சுயநலக்காரனென்று ஏசாதே!

உனக்கு யாரும் உதவவில்லை என்று
மனக்குமுறல் கொள்பவனே
உலகத்தின் நடப்புகளைப் பற்றித்தெரிந்துகொள்
அடுத்தவனுக்கு உதவ எண்ணும்
உதவி பண்ணும் 99 விழுக்காட்டினர்
யாருக்கு உதவிசெய்கிறார்களோ
அவர்களாலேயே
அவமானப்படுத்தப் படுகிறார்கள்
உன் உள்மனத்தைக் கேட்டுப்பார்
உனக்கு உதவி செய்தவர்களை
எப்படியெல்லாம்
அவமானப்படுத்தினாய் என்று
அது சொல்லும்!
நமக்கு சுயநலம் பெருகுவதன்
மூலகாரணமே இதுதான்!
எனவே இனிமேலாவது
சுயநலக்காரனென்று ஏசாதே!
அப்படி அவரை ஆக்கியது
நம் செயலென்று யோசி!

என்ன பாவம் செய்தான் உன்னைத் தொடர?

காலமெல்லாம் அழியாத சின்னங்களாக
இன்றும் சாலைகளில் வலம் வரும்
பழைய வாகனங்கள் எப்போது விடுவிக்கப்படும்?
புதிய தொழில்நுட்பங்கள் பல வந்து
புகையின்றி பயணிக்கக் கற்றுத்தந்தும்
ஏனிந்த பராமரிக்கப் படாத பழையன…
இரண்டுநாள் மீந்தது என்றுமே
உணவாயினும் நஞ்சுதான்
கரும்புகைப் போர்வையில்
உலகத்தைப் போர்த்திவிட
புதிய பிரமாணமா…
இரண்டுமாதம் ஒருமுறை
வாகனங்கள் பராமரிப்பு சாலையில்
புத்துணர்வு ஊட்டப்பட வேண்டும் நண்பா..
உன் பின்னால் வருபவரின்
உணர்வுகளைப் புரிந்துகொள்
உன்வாகனப் புகையைச் சுவாசித்து
உயிர் விட்டுக்கொண்டிருக்கிறான் தெரியுமா….
புரிகிறது!
“சட்டமிருக்கிறதா?” என்றுதானே கேட்கிறாய்?
பாழாய்ப்போன அரசாங்கமும்
கேடுகெட்ட சட்டங்களும்
உன் போன்றவருக்கு அளிக்கும் பாதுகாப்பை
உணர்வுள்ள தனிமனிதனுக்கு அளிப்பதில்லை
அதனால் பயனுமில்லை!
இதனை அறிந்தும் நாமும் சளைக்காமல்
ஓட்டுபோட்டு ஓட்டுப்போட்டு
நம் உரிமைத்துணியில்
ஓட்டை போட்டுக்கொண்டிருக்கிறோம்!

வருக பொங்கலே!

வந்தாயா? வா….!
வருடமொருமுறை வந்து
எங்களுக்கெல்லாம்
நீதான் தமிழனை நினைவூட்டுகிறாய்!
ஏர் பூட்டி சோறுபோட்ட
தமிழன் இன்று மென்பொருள்
செய்யப்போய் விட்டான்
அவனுக்கு அதிலேயும்
திறமை அதிகம்
பழைய சோற்றுக்குப்
பதமாய் மிளகாய் கடித்த
என் தமிழன்
இன்று பிஸ்ஸா வாங்கித்தின்றுவிட்டு
பைசா சம்பாரிக்கிறான்
பெற்ற தாயை மறந்தான்
உற்றாருறவினர் மறந்தான் – உடன்
கற்றார், தோழர் மறந்தான்
காசு வாங்கி கட்டிய மனைவி
ஆசையோடு பெற்ற குழந்தை
மீசையோடு நடந்த மிடுக்கு
எல்லாம் வீசியெறிந்தே பறந்தான்
பழையன கழிதல்,
புதியன புகுதல்
இப்போதைக்கு இதுதான் அவன் மந்திரம்
அதற்குத்தான் போகி என்பதை முற்றிலும் மறந்தான்
உழைத்த உழைப்பில்
பெற்ற உயர்வைப்
பெருமிதமாக எண்ணி
பொங்கலிட்ட பானை மறந்தான்
அறிவு சிறக்க
ஆயிரம் கருத்தை
அழகாய்ச் சொன்ன
வள்ளுவன் திருநாள்
அன்றே மறந்தான்
அனுபவம் கூறி
ஆயுள் [...]

பெண்ணே! அழுது தோற்காதே…!

அழுது புலம்பித்தான்
ஒவ்வொரு காரியமும் சாதிக்கிறாய்
ஆயிரம் வருடங்கள் கடந்தாலும்
உன்னிலை மாற வாய்ப்பில்லை
உன்னைப் பாவப்பட்ட பிறப்பாய் காட்டிக்கொள்வதில்
உனக்கு அளவுகடந்த ஆர்வம்
ஆனால் உனக்குத் தெரியுமா
அது நிரந்தர வெற்றியல்ல என்பது?
பெண்கள் சாதிக்க ஆண்களா முட்டுக்கட்டை
இல்லவே இல்லை
கொஞ்சம் ஆழமாய் யோசித்துப்பார்
அனைத்து ஆண்களும் வெற்றி பெறுவதில்லை
எல்லாப் பெண்களும் தோற்றுவிடுவதுமில்லை!
பிறகெதற்கு ஆண்களின்மேல் பழி
சமூகத்துக்கு நீ எப்படித் தோன்றுகிறாயோ
அப்படியே உன் வெற்றி தோல்விகள்!
உன் அழுகையால்
சமுதாயத்தை தோற்கடித்து விட்டதாக
நீ எண்ணிக்கொண்டால்,
அதுவே உன் முழு தோல்வி
உன் திறமைக்குட்பட்டதை
அடுத்தவரிடம் பிச்சை எடுப்பதே
உன் அழுகையின் அர்த்தம்!
உன்னால் சாதிக்க முடிவதை
அடுத்தவர் சாதனையில் சாதிப்பதே
உன் அழுகையின் [...]

உன்னை மறக்கவில்லை பாரதி!

நீ பிறந்த மண்ணில்
உன் உதிரத்தின் உரத்தில்
உதித்துவிட்ட எங்களுக்கு
உனது பிறந்த நாளில்

ரோஜாவைக் காதலிக்கலாம் முள்ளையுமா காதலிக்கவேண்டும்?

மேலைநாட்டத் தொழில் நுட்பத்தில் நாகரீகத்தைக் கலப்படம் செய்துவிற்கும் தந்திரத்தை தனியே எதிர்க்கிறேன் குரல் கொடுக்க வாரீரோ…
இது பழமைவாதியின் கூச்சலல்ல; ஒரு கலாச்சாரப் பற்றுடையவனின் பாய்ச்சல்!

நான் பிறந்த நோக்கம்

நான் பிறந்த நாள் முதலா
வான் பறக்கும் எண்ணமில்லை
ஏன் பிறந்தேன் என்றெண்ணி

தூண்களெனக் கொண்டிடத் துணிந்திடுவோம் அனைவரும்!

ஒரு மேடைப்பேச்சினூடே படிக்க நான் எழுதிய ஆசிரியரின் பெருமை உணர்த்தும் கவிதை. எழுதப்பட்ட ஆண்டு 2001.